Tuesday, January 17, 2012

இது தேவைதானா




இது தேவைதானா? என்று என் தம்பிதான் அடிக்கடி கேட்பான். இந்த அஃறிணை என்ற பதிவு தேவைதானா? என்று என்னை நானே கேட்டதின் பதில், இந்த பதிவு!

வரலாறு

* படிக்கும் பழக்கம் ஆரம்பித்தவுடனே எழுதும் ஆசையும் வந்துவிட்டது.

பதிவின் நோக்கம்:

* எழுத்தாளானாகும் முயற்சியில்லை இது. ஆனால் இது தமிழில் சரியாக எழுதுவதற்கான பயிற்சி.

* நிறைய ரசிகர்கள் ரசிக்கும் படியாக எழுதுவதற்கல்ல. (எனக்கு புரிந்த) உண்மையை நண்பர்கள் மட்டுமாவது புரிந்துகொள்ளும் வகையில் எழுதுவது.

* படித்த புத்தகங்களைப் பற்றி எழுதப் போகிறேன். விமர்சனம் இல்லை; பிடித்ததை மட்டும் சுட்டிக் காட்டுவதற்காக.

* இனி நிறைய கதை, கவிதைகளை எழுதப் போகிறேன். ஒரு வரியில் நான்கு வார்த்தைகளுக்கு மிகாமல் இருந்தால், அது கவிதை; இல்லையென்றால் கதை.

* யாருமே படிக்கவில்லை என்றாலும் முடிந்தவரை எழுதுவது ( வேறு வழியில்லை, நண்பர்கள் படித்தே ஆக வேண்டும். இல்லை என்றால் நேரடியாக சொல்லி புரிய வைப்பேன். ஜாக்கிரதை ! ).

பிடிச்சா படிங்க!
பிடிகலைன்னாலும் படிங்க!

2 comments:

Kamala kannan said...

இது தேவைதானா?

Dhayalan said...

padichutan