இது தேவைதானா? என்று என் தம்பிதான்
அடிக்கடி கேட்பான். இந்த அஃறிணை என்ற பதிவு தேவைதானா? என்று என்னை நானே கேட்டதின் பதில்,
இந்த பதிவு!
வரலாறு
* படிக்கும் பழக்கம்
ஆரம்பித்தவுடனே எழுதும் ஆசையும் வந்துவிட்டது.
பதிவின் நோக்கம்:
* எழுத்தாளானாகும்
முயற்சியில்லை இது. ஆனால் இது தமிழில் சரியாக எழுதுவதற்கான பயிற்சி.
* நிறைய ரசிகர்கள்
ரசிக்கும் படியாக எழுதுவதற்கல்ல. (எனக்கு புரிந்த) உண்மையை நண்பர்கள் மட்டுமாவது புரிந்துகொள்ளும்
வகையில் எழுதுவது.
* படித்த புத்தகங்களைப்
பற்றி எழுதப் போகிறேன். விமர்சனம் இல்லை; பிடித்ததை மட்டும் சுட்டிக் காட்டுவதற்காக.
* இனி நிறைய கதை,
கவிதைகளை எழுதப் போகிறேன். ஒரு வரியில் நான்கு வார்த்தைகளுக்கு மிகாமல் இருந்தால்,
அது கவிதை; இல்லையென்றால் கதை.
* யாருமே படிக்கவில்லை
என்றாலும் முடிந்தவரை எழுதுவது ( வேறு வழியில்லை, நண்பர்கள் படித்தே ஆக வேண்டும். இல்லை
என்றால் நேரடியாக சொல்லி புரிய வைப்பேன். ஜாக்கிரதை ! ).
பிடிச்சா படிங்க!
பிடிகலைன்னாலும்
படிங்க!
2 comments:
இது தேவைதானா?
padichutan
Post a Comment