தி.ஜானகிராமன் அவர்களின் மோகமுள் - ஒரு அருமையான
புத்தகம். சில புத்தகங்கள் ஏற்படுத்தும் தாக்கம்
அளவிடமுடியாது. இப்படித்தான் என்று முடிவு செய்த கருத்துக்களை அடியோடு புரட்டிப்போட்டு
விடுகிறது. மோகமுள் - அப்படியொரு தவிர்க்கமுடியாத புத்தகம். இதில் மரபு மீறல்களுக்கான சூல்நிலையை
சந்திக்கமுடிந்தது.
எனக்கு தமிழில் வார்த்தைகள்
கிடைக்காமல் போன தருணங்கள் பல..
காதலுக்கு காமத்துக்கும்
இடையான ஒரு வெளி, நட்புக்கும் காதலுக்கும் இடையில் தயங்கி நிற்கும் ஒரு வார்த்தை!
ஆனால் முதன் முறையாய் 'மோகம்' என்றொரு வார்த்தைக்கான விளக்கம்
தேடச் செய்தது இந்த புத்தகம்.
மோகம்-1
ஆஸ்துமாவுடன் போராடும்
வயதானவனின் மனைவியாய் வரும் அழகான இளம்பெண் தங்கம்மா. சுவரேறிக் குதித்து பாபுவைத்
தேடச்செய்ய அவளைத் தூண்டியது எது? காதலா! காமமா!
கள்ளக்காதல் என்று பொத்தாம்
பொதுவாய் புறக்கணிக்கப்படும் செய்யும், அவளின் மோகத்தை படித்துவிட்டு அவள் மீது இரக்கம்
கொள்ளாமல் என்ன செய்வது.
பாபுவைப் போல் ஜன்னல் கதவுகளைச் சாத்தும் தைரியம்
இங்கு எத்தனை பேருக்கு உண்டு!
மோகம்-2
பாபுவை விட யமுனா பத்து
வயது பெரியவள். பாபு யமுனாவின் மீது வைத்திருக்கு பக்தி; யமுனா பாபுவின் மீது வைத்திருக்கும்
பாசம்; சட்டென்று அவள் மீது கொண்டது "மோகம்" என்று புரிந்ததும், பாபுவின்
துணிச்சலை வியக்காமல் இருக்க முடியவில்லை.
அப்படியும்
கூட ஏன் யமுனாவுக்கு (பெண்களுக்கு) பாபுவின்(ஆண்கள்) மீதிருக்கும் அன்பு குறைவதே
இல்லை!
இசை
ரங்கண்ணாவைப் பற்றிப் படித்தபிறகு
இசை மேதைகள் இப்படித்தான் இருப்பார்கள் என்னும் மரியாதை ஏற்பட்டுவிட்டது. இசையை ரங்கண்ணாவைப்
போல் அனுபவிக்க கிடைப்பது பெரும் பாக்கியம்!
குருவைப் பற்றி பல முறை (எழுத்தாளர் பாலகுமாரன்
எழுதி) படித்ததுண்டு. குரு இப்படித்தான் இருப்பார் எனபற்கு நல்ல உதாரணம் - ரங்கண்ணா
அவர்கள்.
கற்றுக்கொள்பவர்களுக்கு குரு சொன்ன பாடம்:
''ஜெண்டை வரிசை ஆகும்போது வெள்ளைக் கடுக்கண் வேணும்
போலிருக்கும். வர்ணம் வந்தா மயில் கண் வேஷ்டி, மல்லு சட்டை. கீர்த்தனம் வந்தா கொஞ்சம்
அத்தர் இருந்தா தேவலை போல இருக்கும். அப்புறம் எங்க தேவடியா வீடு இருக்குன்னு உடம்பு
அலையும். அதுக்கப்புறம் சங்கீதம், பிராணன் எல்லாம் ஒன்னொன்னா கரையும் ...............................................பணமும்,பேரும்,துர்நடத்தையும்
எங்கே, எங்கே என்று வாயைப் பிளந்து கொண்டு விழுங்க காத்திருக்கும் கலை இது."
நட்பு
பிடித்தமான இன்னொரு சிறந்த
நட்பு பாபு & ராஜம் ( மற்றொன்று: இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் கதையில்
வரும் சிவா & கோபால் நட்பு ).
மோகமுள் - ஒரு சிறந்த அனுபவம்..
No comments:
Post a Comment