Tuesday, December 31, 2013

2013


இந்த வருடம் திரும்பிப் பார்த்தால் அலுவலக வேலைதான். அதற்கிடையிலும் சின்ன சின்ன சந்தோஷங்கள்.

பாலகுமாரன்


இந்த வருடம் எனக்குப் பிடிச்ச முக்கியமான நிகழ்வு - எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களை புத்தகக் கண்காட்சியில் சந்தித்ததுதான். பிடித்த புத்தகம் 'என் கண்மனித் தாமாரை' புத்தகம் வாங்கி - அதில் அவரோட ஆட்டோகிராஃப் !


கொடைக்கானல்

உயிர் பிழைத்து திரும்பி வந்த டிரெக்கிங் - வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதது. ஒரு நாள் இரவு முழுவதும் குளிரில் நடுங்கியபடி, ஒரு மரத்துக்கடியில் இருந்தது. எல்லாமே அவ்வளவுதான்கிற போது - அன்று காலையில் பார்த்த அந்த விடியல் - அழகான அற்புதமான ஒரு நிகழ்வு!