Friday, December 24, 2010

சாலை விதிகள்

கார் ஓட்டக் கற்றுக்கொள்ள சென்ற முதல் நாள்..
"இந்த ரோடு எவ்வளவு இருக்கும்?"
"15 அடி", என்றேன்.
"இல்லை அம்பது அடி. கார் ஓட்டும் போது, ரோட்டோட இடப்பக்க பாதியை நாம எடுத்துக்கலாம். மீதியை எதிர்த்தாப்பல வர்றவங்களுக்கு விடனும். அப்படீன்னா இந்த ரோட்டுல நீங்க எவ்வளவு எடுத்துக்குவீங்க?"
"இருபத்தஞ்சு அடி எடுத்துக்கலாம்."
"இருவது அடி ரோட்டுல.."
"பத்து அடி ஸார்"
"அஞ்சு அடி ரோட்டுல.."
"நாலு அடி ஸார். காரோட அகலம் நாலடின்னு ஏற்கனவே சொல்லீட்டீங்க! கணக்குல நான் ஸ்டிராங்"
இப்ப கேள்வி, நிஜமாலுமே நாம பாதி ரோட்டைத்தான் பயன்படுத்துகிறோமா?
இல்லை. எங்க ஏரியாவுல, காலையில முக்கால்வாசி ரோட்டை ரயில்வே ஸ்டேசன் போறவங்க ஆக்கிரமிச்சுவாங்க. சாயுங்காலம் முக்கால்வாசி ரோட்டை திரும்பி வரவங்க ஆக்கிரமிச்சுவாங்க!
எதிர் திசையில் போறவங்களுக்கு எப்பவுமே கஷ்டம்தான்.
இதுதான் எல்லா இடத்திலும் நடக்குது!
அப்படீன்ன சாலை விதிகள் என்னத்துக்கு?

எப்பொழுது மனிதர்கள்(நாம்) சமூகம் என்ற சூழலில் வாழ ஆரம்பித்தோமோ, அப்போழுதே விதிகள் தேவைப்பட்டது. பெரும்பான்மை மனிதர்கள் பயன்படும்படியா விதிகள் உருவாக்கப்பட்டது. விதிகள் சமூகச் சூழலில் ஒழுக்கத்தை உருவாக்கியது.
ஆனாலும் சிலருக்கு விதிகள் விருப்பமின்றியே திணிக்கப்பட்டது. விதிகள் மீறுவதும் இயல்பாயிற்று.

இப்பொழுது சிலர் விதிகளை மீறுவதை பார்த்து, பலரும் மீறுகிறார்கள்.
ரயில்வே கேட்டில் காத்திருக்காமல் செல்வது..
சிக்னலில் பச்சை ஒளிர்வதற்கு முன்..
எதிரில் வருவதற்கு வழிவிடாமல் ரோட்டை ஆக்கிரமித்து செல்வது..
இதில் என்ன தப்பு? பல பேர் பயன்படும்போது விதிகளை மீறுவதில் என்ன தப்பு!


மணாலியிலிருந்து ஏர் பஸ்ஸில் கீழே வந்துகொண்டிருந்தோம்.
ஏர் பஸ்.. மலைப் பாதை என்றாலே சிரமம்தான்.



மேலிருக்கும் படத்திலிருக்கும் வழி போல், ஒரு குறுகலான வழியில் செல்லவேண்டியிருந்தது. அந்த வழியில், ஒரே சமயத்தில் ஒரு வண்டிதான் செல்ல முடியும். அதனால் இரண்டு புறமும் சிக்னல் இருந்தது. ஒரு சமயத்தில் ஒரு திசையில் மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது.
எங்க பஸ் கிரீன் சிக்னலுக்காக கால் மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தது.
கிரீன் சிக்னல் கிடைத்த பின் முந்நூறு மீட்டர் போயிருப்போம், எதிர்புறமாய் ஒரு கார் வேகமாய் வந்தது.
எங்க பஸ்ஸூம் முன்னே செல்ல முடியாது. அந்த காரும் பஸ்ஸை தாண்டி செல்ல முடியாது. எங்க பஸ்ஸூக்கு பின்னால் பல வாகனங்கள்..
கண்டக்டர் பஸ்ஸிலிருந்து இறங்கி சத்தம் போட்டார். அந்த கார் டிரைவர் புரிந்து கொள்ளாமல், சண்டை போட்டார்.
சண்டை முடிவுக்கு வருவதற்குள், எதிர்புறமும் வாகனங்கள் வந்து சேர்ந்தன.
DEAD LOCK.
டிராஃபிக் இன்ஸ்பெக்டர் வந்து டிராஃபிக் கலைவதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாயிற்று.
அந்த கார் டிரைவர் கிரீன் சிக்னலுக்காக காத்திருந்திருக்கலாம்!


விதிகளை மீறும்போது பல பேர் அவதிப்பட வேண்டியிருக்கிறது.
பிரச்சினைகளை உருவாக்கும், விதிகளை மீறும் நபர்களில் ஒருவராக நாம் இல்லாமலிருக்கலாம்.

2 comments:

Dhayalan said...

good message

i think u r following the traffic rules??????????????????

Gg said...

Vast