என்னைப் பற்றி...

என்னைப் பற்றி என்றவுடன், எனக்கு உடனே தோன்றும் எண்ணம்..
நான் நல்லவன் !
எனக்கு எப்போதும் அந்த வார்த்தையில் ஒரு மயக்கம்.
           
நிறைய புத்தகங்கள் படிப்பேன்.

எங்கோ படித்தது " ஒருவர் ரசித்தால் கூட போதும், எந்த ஒரு கலைப் படைப்பும் உன்னதமானவை"
                                                       
கதை எழுதுவதில் முயற்சித்திருக்கிறேன்
கவிதைகள் எழுதியிருக்கிறேன்
ஒவியங்கள் வரைந்திருக்கிறேன்
வயலின் வாசிக்க கற்றுக்கொள்ளப் போகிறேன்.

தன்னம்பிக்கை கொஞ்சம் அதிகம்.
அதனால் தலைக்கனத்திற்கான நூலிலை இடைவெளியை அவ்வப்பொழுது தாண்டுவதுண்டு.
அடிக்கடி நினைவில் கொள்வது
" என்னை விட உயர்ந்தவர்கள் யாருமில்லை? நிச்சயமாய் தாழ்ந்தவர்கள் எவருமில்லை"

எனக்கு நிறைய நகைச்சுவை உணர்வு உண்டு.

உலகின் மிகச்சிறந்த MAGIC 'அன்பு' என்பதால், எல்லோர் மீதும் அன்பு செலுத்தும் ஆசை உண்டு ஆனால் முடிவதில்லை

நான் மிகவும் அமைதியானவன்.

வாழ்க்கையை ஒவ்வொரு நொடிப்பொழுதும் 'வாழ' நினைப்பவன்.

பொய் சொல்ல விரும்புதில்லை!
பொய்யாய் இருக்க முடிவதில்லை..

என்னைப் பற்றிய நிறைகள் நிறைய கூறிவிட்டேன்.
குறைகள்..
எதுவுமில்லை! இருந்தால்தானே எழுதுவதற்கு!!!!