Sunday, February 8, 2015

ராமானுஜன்



ராமானுஜன் படத்தைப் பார்த்தபின், நம் தற்போதைய கல்விமுறை இன்னொரு ராமானுஜனை உருவாக்கும் வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.

* ராமானுஜன் கல்லூரியில் கணிதம் தவிர மற்றதில் தோல்வி அடைகிறார். இன்று கணிதத்தில் மட்டும் அறிவாளியாக உள்ள ஒருவன் கல்வி தொடர்ந்து கற்க இந்த கல்விமுறை அனுமதிக்குமா?

* நம் நாட்டில் எத்தனை பேர் படித்தும், முட்டாள் இயந்திரங்களாகத்தான் இருக்கிறார்கள்.

* கல்வி சுயநலத்தையும் கோழைத்தனத்தையும் சொல்லிக் கொடுக்கிறது.

* எது சொன்னாலும் நம்பும் பகுத்தறிவு திறனற்று அல்லவா இருக்கிறோம்.

* (ஃபேஸ்புக்கில் படித்தது)  ஏழ்மையின் காரணமாக கல்வி மறுக்கப்பட்ட ஒருவனுக்கு கேன்சர் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆற்றல் இருந்திருக்கலாம்.


* ஏதோ மிகப்பெரிய தவறு நடப்பதாக தோன்றுகிறது. இந்தக் கல்வி முறை வெறும் வியாபார நோக்கத்திற்கு மட்டும்தான் என்றால், நாமெல்ல்லாம் கல்வி பெற்ற மாக்கள்


2014


கடந்த வருடத்தைப் புரட்டிப் பார்க்காமல், புதிய பதிவுகளை எழுத மனசு வரவில்லை.

வெற்றிப் பெருமிதம்

மிகப்பெரிய போர் முடிந்த மாதிரி இருந்தது. இரண்டரை வருட ப்ராஜக்ட் ரிலீஷ் ஆனபோது. என் வாழ்நாளில் தொடர்ந்து மூன்று வாரம் விடுமுறை இல்லாமல் வேலை செய்த வருடம். ( நான் நல்லா வேலை செய்வேன்னு தெரியும், ஆனால் இப்படி கடுமையா வேலை செய்வேங்கிறது வியப்புதான்!)

வெற்றிப் பெருமிதத்தோடு இருந்த நான், ஊரே புகழும்னு எதிர்பார்த்தேன். ஆனால் நான் எதிர்கொண்ட இயல்பான சூழல, என்னை தன்னிரக்கத்தில் கொண்டு சேர்த்தது. சுற்றி இருந்த எல்லோரும் முன்னாடி போயிட்டாங்க, நான் மட்டும் இரண்டு வருடம் அங்கேயே இருக்கிற மாதிரி இருந்தது. கடுமையான உழைப்புக்கான பரிசு வெறும் வாய்-புகழ்ச்சிதானா?
நல்லவர்கள் துணையோடு தன்னிரக்கத்தில் இருந்து விடுபடமுடிந்தது. நான் இல்லையென்றாலும் அந்த பிராஜக்ட் நல்லாதான் முடிஞ்சிருக்கும். நான் வெறும் கருவி. ஒரு . எக்லிப்ஸ் மாதிரி.

அந்தப் பிராஜக்டால் பயன்பெறுபவர்கள் எண்ணிக்கையை நினைக்கும் போது, எனக்கு அதில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்ததே மிகப்பெரிய பரிசுதான்.

நீச்சல்

ஒரு வழியா நீச்சல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கற்றுக்கொண்ட வருடம். ஓரளவுக்கேனும் நீச்சல் அடிக்க முடிகிறது.

இமாலயப் பயணம்



இந்த வருட சாதனை. உத்தர்காண்ட் மாநிலத்தில் கேதார்காந்த் பயணம். நான்கு நாட்கள் பனிமலையில் நடைபயணம். தண்ணீர் உறையும் மைனஸ் கடும்குளிர். வெட்டவெளியில் கூடாரம். 25000 அடி கேதார்காந்த் உச்சியில் ஏறியது, என்னுடைய வாழ்க்கையில் ஒரு மைல் கல்தான்.