Friday, July 22, 2011

ஹாய் தினேஷ்


மதன் அவர்களை நான் ரொம்ப ரொம்ப மதிக்கிறேன். அவரோட ரசிகன் நான். அவரை மாதிரி என்னால ஆக முடியாதுன்னு தெரியும். ஆனாலும் அதற்காக முயற்சி செய்யாம இருக்க முடியுமா, சொல்லுங்க?






*மாலதி
உங்களோட வாழ்க்கையின் நோக்கம் என்னவென்று நினைக்கிறீங்க?
எனக்கு பிடிச்ச மாதிரி வாழ்றதுதான்!


*தயாளன்
நீங்க நல்லவரா? கெட்டவரா?
நல்லவன் யாரு? நல்லது செய்யறவன்.
யாரு நல்லது செய்வாங்க? நல்ல எண்ணம் இருக்கிறவங்க.
யாருக்கு நல்ல எண்ணம் இருக்கும்? நல்லவங்களோட பழகிறவங்களுக்கு.

எங்கூட பழகிறவங்களும் நல்லவங்களா இருக்காங்க. என் நண்பர்களும் நல்லவங்களா இருக்காங்க.  இப்படி என்னை சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் நல்லவங்களா இருக்காங்க. அதனால நான் ரொம்ப நல்லவனா இருக்கிறேன்.

உங்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்குங்களா?

எந்த விஷயத்தை எதிர்கொள்ளும் போதும் ஏற்படக்கூடிய பயம்தான், வெட்கம்.
தப்பு செய்யறவங்களுக்குதான் வெட்கம் வேணும். எனக்கு எதுக்கு?

மானம், சூடு, சொரணைங்கிறது எல்லாம், வெறும் உணர்ச்சி கொந்தளிப்பு. இல்லைங்கிற ஒரு விஷயத்தை இருக்குற மாதிரி காட்டற பாசாங்கு எனக்கு தேவையில்லை.

அந்த பெண்ணை புரோபோஸ்(Propose) பண்ணீட்டிங்களா?

அந்த பெண்ணை, நான் நிஜமாலும் விரும்பி, ஒரு நாள் அவ இல்லைனா நான் இசையில்லாத வெறும் பாடல் மாதிரி உணர்ந்தா, அன்னிக்கு அவங்களை புரோபோஸ் பண்ணுவேன். சரி எந்த பெண்ணை?


*கமலக்கண்ணன் 
கம்யூனிசம் சோஸியலிசம் பற்றி புரியற மாதிரி சொல்லுங்க?

ஒரு பணக்காரன், ஒரு நிலம் வைச்சிருந்தான். அந்த ஊர்ல தண்ணீர் தேவைப்பட்டதால, அவன் நிலத்தில கூலி ஆளுங்களை வைச்சு கிணறு தோண்டினான். அதுக்கு கூலியா குடிக்கிறதுக்கு தண்ணீ கொடுத்தான். அவன்தான் கிணத்துக்கு முதலாளி. எல்லாருக்கும் வேணுங்கற தண்ணீரை காசுக்கு வித்து மேலும் பணக்காரன் ஆனான். வேலை செஞ்ச கூலி ஆளுங்க, தண்ணீரை காசு கொடுத்து வாங்கி கடன்காரங்களா ஆனாங்க! இதுதான் கேபிடலிசம்.

கிணறு தனக்கு சொந்தமாயிருந்தாலும், தண்ணீர் எல்லோருக்கும் பொதுவானது. அவன் ஒரு அரசாங்கம் மாதிரி தண்ணீரை தேவைப்படுற எல்லோருக்கும் தேவையான அளவு கொடுத்தான். இது சோஸியலிசம்.

கிணறும் எல்லோருக்கும் பொது. தண்ணீரும் எல்லோருக்கும் பொது. இது கம்யூனிசம்.

*ரங்கநாதன்
Belief க்கும் faith க்கும் உள்ள வித்தியாசம்?
இரண்டுமே நம்பிக்கையை குறிக்கும் வார்த்தைகள்தான்.

Belief- தெரிந்த உண்மைகளை அடிப்படையாக கொண்டது.
Faith - உணர்வுகளை அடிப்படையாக கொண்டது.
கேள்விகளுக்கு பதில் எழுதுவேன்னு நான் நினைச்சது Belief. அதையே நீங்க நினைச்சது Faith.




பின் குறிப்பு:

மதன், நீங்க கிரேட். கேள்விகளுக்கு எனக்கு பிடிச்ச மாதிரி பதில் எழுதறதே கஷ்டமா இருக்கே. எப்படி எல்லோருக்கு பிடிச்ச மாதிரி நீங்க எழுதறீங்க.

Saturday, July 16, 2011

ஹாரி பாட்டர் 7

7-21-07

மூனு மாசம் முன்னாடியே, நான் லேண்ட்மார்க்ல  ரிசர்வ் பண்ணிட்டேன். விடிய காலையில அஞ்சரை மணிக்கே என்னை வரச் சொன்னாங்க.

வீட்டிலிருந்து அவ்வளவு சீக்கிரமா ஸ்பென்சர் பிளாசா போக முடியாது. அதனால முதல் நாள் நைட்டு நான் ஆபிஸில் தங்கிட்டேன்.  எங்கூட சுபமும் (நண்பர் சுப்பிரமணியன்) எனக்காக ஆபிஸில் இருந்தார்.

அவர் இன்டர்நெட்டுல் கடைசி புத்தகத்தை பத்தின எல்லா ரூமர்ஸையும் சத்தமா படிச்சிட்டே இருந்தும், நான் கொஞ்சம் கூட கண்டுக்கலை.

என்னோட ஒரே கவலை, ஹாரி பாட்டர் கடைசியா செத்துடுவாரோ?
நல்ல எழுத்தாளர்னு பேர் வாங்கறதுக்காக என்ன வேனும்னாலும் செய்வாங்க!

காலையில சீக்கிரமா எந்திரிச்சு அஞ்சரை மணிக்கு முன்னாடியே போயிட்டோம். அன்னிக்குத்தான் முதல் முறையா இருட்டான ஸ்பென்சர் பிளாசாவை பார்த்தேன்.

எங்களுக்கு முன்னாடி லேண்ட்மார்க்குல பெரிய வரிசையே நின்னுட்டு இருந்துச்சு. நிறைய  சின்ன பசங்க, அவங்க பேரண்ட்ஸ் கூட இருந்தாங்க. அப்புறம் நிறைய பொண்ணுங்க அவங்க பாய் ஃபிரண்ட்ஸோட இருந்தாங்க. குறிப்பா ரெண்டு பொண்ணுங்க விட்ச் மாதிரியே டிரஸ் பண்ணியிருந்தாங்க.

சுமார் ஆறு மணிக்கு ஒரு குட்டிப் பொண்ணு கேக் வெட்டி, முதல் ஹாரி பாட்டர் புத்தகத்தை சந்தோஷமா வாங்குச்சு. சந்தோஷமா நாங்க எல்லோரும் கை தட்டினோம், சத்தம் போட்டோம்.

கையில புத்தகம் வாங்கின எல்லோர் முகத்திலும் சிரிப்பு, சந்தோஷம்.

நானும் பாக்கிப் பணத்தை கொடுத்து, பெருமையோடு புத்தகத்தை வாங்கினேன். சாப்பிடறதுக்கு, எல்லோருக்கும்  பர்கர் கேக் ஜூசு சும்மா கொடுத்தாங்க.

கேக்கை கூட கண்டுக்காமல், சின்ன பசங்கதான் ஜாலியா இருந்தாங்க. சின்ன பசங்கதான் ரொம்ப என்ஜாய் பண்றாங்கன்னு, சுபம் சொன்னாரு.

அன்னிக்கு முழுவதும் எங்கயும் நகராம, புத்தகத்தை படிச்சு முடிச்சேன்.



இன்னிக்கும் என் வாழ்க்கையில் பெருமையான விஷயமா நினைக்கிறது, நான் ஹாரி பாட்டர் புத்தகத்தை முதல் நாளே வாங்கினதும், படிச்சதும்தான்.

*****

முதல்ல ஹாரி பாட்டர் புத்தகத்தை பத்தி எதுவும் தெரியாது. முதல்ல ஹாரி பாட்டர் சினிமாவைத்தான் ரிலீசான அன்னிக்கே பார்த்தேன். அதுவும் வேற படம் எதுவும் ரிலீஸ் ஆகாததால பார்த்தேன்.

முதல் பாகம் பிடிச்சதால, ரெண்டாம் பாகம் ரிலீசானவுடனே பார்த்தேன். அதுக்கப்புறம்தான் ரௌலிங்கை பத்தியும் புத்தகத்தை பத்தியும் பேப்பர்ல படிச்சேன்.

அதுவரைக்கும் நாலு ஹாரி பாட்டர் பாகங்கள்தான் எழுதி இருந்தாங்க. அதோட விலையை விசாரிச்ச போதுதான் தெரிஞ்சது, ரெண்டாயிரம் ரூபாய்!

காலேஜ் முடிச்சு, வேலைக்கு போய் சம்பாதிச்சதும் வாங்கனும்னு முடிவெடுத்தேன்.

நான் சென்னை வந்து வேலையில சேர்ந்தும், அதுவரைக்கும் வந்திருந்த ஆறு ஹாரி பாட்டர் பாகங்களையும் (பைரேட்டட் புத்தகங்கள்) வாங்கினேன்.

முதல் முறையா நைட்டு ரெண்டு மணி, மூனு மணி வரைக்கும் தூங்காம, முழிச்சிருந்து ஆறு புத்தகங்களையும் நான் படிச்சேன்.

ஏழாவது புத்தகத்துக்காக காத்திருந்தது இருக்கே, அது ஒரு பொண்ணுக்கிட்ட லவ்வை சொல்லிட்டப்புறம் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறதை விட கொடுமையான விஷயம்.

கடைசி புத்தகத்தையும் முதல் நாளே வாங்கி படிச்சு முடிச்சேன்.

ஹாரி பாட்டர் கதை முடிவு சந்தோஷத்தை கொடுத்தாலும், ஒரு நல்ல தோழியோட திருமணம் கொடுத்த சந்தோஷம் மாதிரிதான் இருந்துச்சு.

இனி நம்ம கூட இல்லைன்னாலும், நினைவுகளை புரட்டுகிற மாதிரி, ஹாரி பாட்டர் புத்தகங்களையும் எத்தனை தடவை வேண்டுமானாலும் படிக்கலாம்.

*****

கதைல ஒருத்தர் இறக்கும் போது, மனசுல கணத்தை உணர்ந்திருக்கீங்களா?
இந்த புத்தகத்தில டாபி (Dobby) சாகும் போது உணர்வீங்க.

கதையில் ஒருத்தரோட அன்பை புரிஞ்சுக்கும் போது, நெகிழ்ந்து போயிருக்கீங்களா?
ஸ்நேப்-ஐ (Snape) பத்தி தெரியும் போது, எப்படி இருக்கும்னா..
ராமாயனத்தில் குகனோட இருப்பிடத்தில பரதன் ராமரை சந்திக்கிறதை படிக்கும் போது கண்ல தண்ணீர் வருமே, அது மாதிரி இருக்கும்.

ஹாரி பாட்டர் புத்தகத்தை படிச்சீங்கன்னா, கண்டிப்பா நீங்களும் விரும்புவீங்க!

**** 

பின் குறிப்பு:

அட்லான்டிஸ் காம்ப்ளக்ஸ் ("Atlantis Complex" - 7th book in "Artemis Fowl" series)  புத்தகத்தில் வர ஹீரோ ஆர்டிமிஸ், நம்பர் 5 மேல அடிக்ட் ஆயிடுவாரு. அதனால அவர் பேசறது எல்லாம் அஞ்சு (அல்லது அஞ்சின் மடங்கா) வார்த்தைகள் இருக்கற மாதிரி, எழுதி இருப்பார்.

எனக்கு இந்த கான்செப்ட் ரொம்ப பிடிச்சிருக்கு. 7 -தான் ஹாரி பாட்டர் புத்தகத்தில் வர மேஜிக் நம்பர். அதனால அர்த்தம் வருதோ இல்லையோ, ஒவ்வொரு வரிகளிலும் 7 ( அல்லது 7ன் மடங்கா) வார்த்தைகள் இருக்கிற மாதிரி , இந்த பதிவை எழுதி இருக்கேன்.
படிச்சுப் பாருங்க! எண்ணிப் பாருங்க!

Thursday, July 7, 2011

ஆண் பாவம்


"டேய்.. இடிக்கிறதே வேலையாப் போச்சா. நானும் பாக்கிறேன். இடிச்சிக்கிட்டே வர்றே.."

அவளுடைய சத்தம் சப்வே முழுவதும் எதிரொலித்தது.

தயா திரும்பி பார்த்தான்.

படிக்கட்டில் எல்லோரும் வேகமாய் இறங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் அவள் ஒரு பையனை லேடிஸ் பேக்கால் அடித்துக் கொண்டிருப்பது நன்றாக தெரிந்தது. அவள் கலர் கம்மியாக இருந்தாலும் அவள் ஒரு ஜீன்ஸ் போட்ட மகாலட்சுமி மாதிரி இருந்தாள். அந்த பையன் ஏதோ சொல்கிறான், ஆனால் கேட்கவில்லை.

நான்கு பேரைத் தவிர எல்லோரும் பாத்துக் கொண்டே (கண்டுகொள்ளாமல்) போய் கொண்டிருந்தார்கள். கிண்டி சப்வேயில் காலையில் யாரிடமும் டைம் கூட கேட்க முடியாது. அதாவது  பரவாயில்லை, சென்ரல் ஸ்டேசனுக்கான சப்வேயில் ஓடும் போது யார் முகத்தையும் பார்க்க முடியாது.

ஃபாஸ்ட் டிரெயினைப் பிடிப்பதற்காக தயா வேகமாக நடந்தான். ரெண்டு பேர் மேல் மோதியும் ஸாரி கூட கேட்கவில்லை.

பிளாடஃபார்மில் நின்று கொண்டிருந்த டிரெயினில் ஓடிப் போய் ஏறினான்.

கடைசி வரிசையில் குரூப்பாய் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் போடும் மொக்கை தாங்க முடியாது. அன்றைய ஹாட் டாபிக்கை சத்தம் போட்டு விவாதிப்பார்கள். கடைசி வரை இறங்கவே மாட்டார்கள்.

அவர்களுக்கு முன் வரிசையில், ஜன்னலோரமாய் ஒரு அழகான பெண் உட்கார்ந்திருந்தாள். மஞ்சள் கலர் சுடிதாரில் சூரியகாந்தி பூ மாதிரி இருந்தாள். அந்த பெண்ணை சைட் அடிப்பதற்காக, எவ்வளவு மொக்கையை வேண்டுமானாலும் கேட்கலாம்.

அவள் இருக்கும் வரிசைக்கு பக்கத்தில் நின்று கொண்டான். அந்த பெண்ணின் பக்கத்தில், ஒரு ஆண்டி.  டிபன் பாக்ஸில் இருந்து இட்லியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

"இந்த பசங்களுக்கு கூட்டத்தைக் கண்டா போதும், பொண்ணுங்களை இடிக்க வேண்டியது. அப்புறம் அவங்ககிட்ட அடி வாங்க வேண்டியது", சிரித்து கொண்டே பின்வரிசையில் ஒருத்தர் பேசியது கேட்டது.

"ஆமா உன்னை மாதிரி, தெரியாம இடிக்க, அந்த பசங்களுக்கு தெரியலை" இன்னொரு குரல்.

'மொக்கையை ஆரம்பித்து விட்டார்கள். பசங்களுக்கு வேற வேலை இல்ல பாரு.', தயா மனசுக்குள் நினைத்துக் கொண்டான். அந்த பெண்ணின் தோடு அழகாக ஆடியது.

"எத்தனை பொறுக்கிப் பசங்க வேணுமுன்னே இடிக்கிறானுங்க. அவனுங்களைக் கண்டா பயந்துட்டு பேசாம போயிடறாங்க" என்றது நக்கல் குரல்.

'கரெக்ட்டு..', அந்த பெண் உதட்டு மேல் இருந்த வேர்வையை துடைப்பது அழகாயிருந்தது. 'அவளையே பார்த்துக் கொண்டிருக்க கூடாது. அப்பப்ப வேற பக்கமும் பார்க்கனும்'. தயா, அந்த ஆண்டி கடைசி இட்லி துண்டை விழுங்குவதை பார்த்தான்.

"ஆனா ஒரு அப்பாவி கிடைச்சா போதும், அடி பிண்ணிடுவாங்க" அதே குரல் கேட்டது.

அந்த பெண்ணோட ஹேர்-பின்னில் சின்னதாய் வெள்ளை பூ டிசைன்.

"பாவம் பொண்ணுங்களும் என்னதான் பண்ணுவாங்க, சொல்லுங்க ஸார். அவங்களும் இந்த கூட்டத்தில் நசுங்கி கசங்கிதான் போக வேண்டியிருக்குது", ஒரு பாவமான குரல் கேட்டது.

பார்க் ஸ்டேசன் வந்து விட்டது. இன்னும் அஞ்சு நிமிசத்தில் சென்ட்ரல் ஸ்டேசன்ல டிரெயினை பிடிச்சா, கரெக்ட் டைமுக்கு பெரம்பூர் போயிடலாம். இறங்கி ஓட வேண்டும்.

டிரெயின் நின்றது. அந்த அழகான பெண்ணும் இறங்கியது. தயா அவள் பின் செல்லும் போது, யாரோ ஒரு லேடி குறுக்கே வந்தார்கள். அந்த லேடியை தாண்டிப் போக முடியவில்லை.

வேகமாப் போனால் டிரெயினையாவது பிடிக்கலாம். சப்வேயில் சரியான கூட்டம். பின்னால் தள்ளினார்கள். முன்னாடி அதே லேடி.

டிரெயின் இட்லி சாப்பிட்ட ஆண்டி. தயா-வைப் பார்த்துக் கத்தினாள், "டேய்.. இடிக்கிறதே வேலையாப் போச்சா. நானும் பாக்கிறேன். இடிச்சிக்கிட்டே வர்றே.."

ஆண்டி காலில் இருந்து செருப்பை கழட்டுவது தெரிந்தது.

"மேடம். நான் எதுவும் பண்ணலை", தயா பரிதாபமாக சொன்னான்.

முன்னால் போய் கொண்டிருந்த அந்த அழகான பெண், தயா-வைத் திரும்பி பார்த்தாள். 

*****

பின்குறிப்பு

1. தயாவின் வேதனை:
      அந்த அழகான பெண்கிட்ட அடி வாங்கியிருந்தா கூட பரவாயில்லை. ஒரு ஆண்டி கையில அடி வாங்கிட்டனே. என்ன கொடுமை ஸார், இது!

2. தயாவின் வேண்டுகோள்:
      லேடிஸ், ப்ளீஸ். பப்ளிக்ல யாரையாவது அடிக்கிறதுக்கு முன்னாடி அல்லது திட்டறதுக்கு முன்னாடி, ஒரு தடவ யோசிச்சு பாருங்க. அந்த பையன் தெரியாம பண்ணியிருக்கலாம். அவன் நிஜமாலும் ஒரு அப்பாவியா இருக்கலாம்.