இந்த வருசம் நான் படிச்சு முடிச்ச முதல் புத்தகம் கி. ராஜநாராயணன் (கி.ரா.) எழுதிய "வயது வந்தவர்களுக்கு மட்டும்".
நம்ம நாட்டுப்புறக்கதைகளிலிருந்த பாலியல் கதைளோட தொகுப்பு இது. தாத்தா ஒருத்தர் சொல்லுகிற அம்பதுக்கு மேற்பட்ட "கெட்ட வார்த்தை கதைகள்" தான் இந்த புத்தகம்.
கி.ரா. வின் சில வாக்கியங்கள்..
“அடேயப்பா, எத்தனை வகைக் கதைகள்!
இந்தக் கதைகளினால் எதாவது பிரயோஜனம் உண்டா யாருக்காவது?
இந்தக் கதைகள் எல்லாத்தையுமே அப்படிச் சொல்ல முடியாது. பிரயோஜனமுள்ளவை, அல்லாதவை, தெரிந்து கொள்ள வேண்டியவை, மனுசக் கற்பனைகள், அவனோட விகாரங்கள், ஆசைகள், கனவுகள், இப்படி இன்னும் எத்தனையோ அடங்கி இருக்கு இதுகளில்.
இந்தக் கதைகளை கேட்கிற காதுகளையும் ஏற்றுக் கொள்கிற மனசுகளையும் பொறுத்திருக்கிறது எல்லாம்.
ஓரளவு பழுக்காத மனசுகளை இவை பாதிக்கலாம். என்றாலும் இதை என்றைக்கிருந்தாலும் எதிர்கொள்ள வேண்டியதுதான்.
இவைகளை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய முன்னோர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல; கோயில்களிலும், தேரிகளிலும் சிற்பங்களாகத் தெரியட்டும் என்றுதான் செதுக்கி வைத்திருக்கிறார்கள்”
“பாலியல் கதைகளைச் சொல்லுவதற்கு ஒருவகை "ஜாலக்" தேவைப்படும். சொல்ல முடியாத, பளிச்ச்சென்று சொல்லிக்காட்ட முடியாத பச்சை வார்த்தைகளை மாற்றுச் சொல்லாலும் குரல் தேய்ப்பாலும் அபிநயத்தாலும் ஒரு சிமிட்டலாலுங் சொல்லிவிட முடியும்.
ஆனாலும் எழுதுகிற போதுள்ள இக்கெட்டு வேற எதிலுங் கிடையாது “
ஆனாலும் நல்லா எழுதியிருக்கிறார். நம்ம "கலாச்சாரம்" பாதிக்காத மாதிரியான வார்த்தைகளைத்தான் உபயோகித்திருக்கிறார். வயதுக்கு வந்த எல்லோரும் படிக்கலாம்.
*****
இந்த 'விஷயத்தை' படிக்கிறது; பேசறது; பார்க்கிறது; எல்லாமே தப்புங்கிற பாவனையிலதான் நாம (இந்த உலகம்) இருக்கோம். இந்த மாதிரி ஜோக்குகள் இது வரைக்கும் யாருமே கேட்டதில்லையா. அல்லது பார்த்ததுதானில்லையா (எத்தனை சினிமா! இப்ப இன்டர்நெட்).
இதை ரசிக்கலாம்; ஆனால் யாரும் வெளிப்படையா ஒத்துக்க மாட்டாங்க. என்ன அசிங்கம்னு சொல்லனும்.
நம்ம கலாச்சாரத்தை பொறுத்த வரைக்கும் காமம், கலவி, பால் உறுப்புகள் எல்லாமே கெட்ட வார்த்தை!
நல்ல சினிமாவில் கூட ஒரு எல்லை வரை காட்டலாம்னு அனுமதிக்கிறது நம்ம கலாச்சாரம்; கற்பனையை பலவிதமாய் தூண்டும்படிதான் எல்லாமும் இருக்கிறது. நிஜத்தை ஏற்றுக் கொள்ளாமல் போலித்தனமாய் கற்பனையில் மட்டும் ஏற்றுக் கொள்கிறோம்.
போதுங்க இந்த போலித்தனம்.
வயிற்று பசிபோல்தான் வயசுப் பசியும். காமத்தை காதலோடு சொன்னதுங்க நம்ம இலக்கியத் தமிழ். காமத்தை தனியே பிரிச்சு, மறைச்சு அசிங்கப் படுத்தினது போதும்.
*****
5 comments:
நிருபிக்கபடாத கடவுளை பகிரங்கமா தேடுறோம்.. வாழ்க்கையின் ஒரு பகுதியானா காமத்தை திருட்டுத்தனமா தெரிந்துகொள்ள வேண்டியிருக்கு
டேஏய் உனக்கு இதை தவிர வேற எதுவுமே தொநதா டா
No Comments :))))
Post a Comment