Saturday, June 25, 2011

இரை



மைக்கேல் கிரிக்டன்(Michel Crichton) எழுதிய பிரே(PREY) புத்தகத்தில் இருந்த, அறிமுகப் பக்கத்தில் படித்தது.

பரிணாமம் (Evolution):

முதலில் ஒரு செல் உயிரினம் தோன்றி, படிபடியாக பல உயிரினங்கள் தோன்றின. பரிணாம வளர்ச்சியின் இறுதிக்கட்டத்தில் நாம் (மனிதர்கள்) தோன்றியிருக்கிறோம்.

இன்றும் பரிணாம வளர்ச்சி ஏற்படுகிறதா?

உண்மையை சொல்ல வெண்டுமானால், நம்மைச் சுற்றி ஏற்படும் மாற்றஙகளை நாம் கவனிக்கவில்லை.

ஒரு குறிப்பிட்ட நோய் அழிந்த நிலையில், மீண்டும் வேறு விதமாக புதிய நோயாய் பரவுகிறது. அப்படியானால், நம்முடைய நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராக, புதிய நோய் கிருமிகளாய் உருவாகி இருக்கின்றன.

பல காலமாய், விலங்குகளும் தாவரங்களும் எந்த மாற்றத்துக்குள்ளும் உள்ளாகவில்லை என்று நினைக்கிறோம். பார்ப்பதற்கு அப்படித்தான் தெரிகிறது. ஆனால், பூச்சிகளின் தொந்தரவுகளுக்கு உள்ளான தாவரங்களுக்கு எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கிறது. அதே போல் பூச்சிகளும் புதிய பரிணாமத்தோடு தாக்குகின்றன.

நாம் உணர்கிறோமோ, இல்லையோ.. இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிரினமும், விலங்குகள், பூச்சிகள், மரங்கள், செடிகள், ஒவ்வொன்றும் மற்ற உயிரினங்களுக்கு தக்கபடி மாறிக் கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு கணமும் பரிணாம மாற்றம் ஏற்படுகிறது என்பது தவிர்க்க முடியாத உண்மை.

நம்மால் இயற்கையை புரிந்துகொள்ள முடிவதில்லை. அது இரு சிக்கலான வலைப் பின்னலைப் போல ஒரு உயிரினக் கோளத்தை(Bio sphere) உருவாக்கி இருக்கிறது. நம்மால் புரிந்துகொள்ள முடியாத இன்னொரு விஷயம், நாம் ஏற்படுத்தும் மாற்றத்திற்கான விளைவுகள்.

கடந்த காலத்தில் கவனமின்றி செய்த தவறுகள் ஏராளம். ஆனால் இன்றும் நாம் சரியாகத்தான் செயல்படுகிறோம் என்று எண்ணுகிறோம். இனியும் நாம் கவனமின்றி தவறுகள் செய்யலாம், என்பதை ஏற்க மறுக்கிறோம். எப்படி சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் கவனமின்றி இருக்கிறோமோ, அதே போல் சுற்றுச்சூழலை காப்பதிலும் கவனமின்றி இருக்கிறோம்.

***

ஒரு உயிரினம் என்பது , தன்னைப் போல் இன்னொரு உயிரினத்தை உருவாக்கக் கூடியது. நம்முடைய  அறிவியல் வளர்ச்சியில், புதிய செயற்கை உயிரினம் உருவாகக் கூடிய சூழல் உண்டு. அந்த சூழல், நானோ டெக்னாலஜி(Nano Technology), பயோ டெக்னாலாஜி(Bio Technology) மற்றும் கம்ப்யூட்டர் டெக்னாலஜி(Computer Technology) சந்திக்கும் இடத்தில் உள்ளது. இந்த மூன்று தொழில்நுடபத்திலும் பொதுவான ஒன்று, தன்னைப் போல் உருவாக்கும் வல்லமை.

கம்ப்யூட்டர் டெக்னாலஜி - ஆர்ட்டிபிஸியல் இன்டலிஜென்ஸ்(Artificial Intelligence) எனப்படும் செயற்கை அறிவுக்கான ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும் நாம் உருவாக்கிய கம்ப்யூட்டர் வைரஸ்கள் - பல வைரஸ்களை உருவாக்கி, பரவக் கூடிய வல்லமை படைத்தவை.
பயோ டெக்னாலாஜி - மெக்ஸிகோவில் ஜீன்(gene) மாற்றம் செய்யப்பட்ட சோளங்களின் பண்புகள், இயற்கையாக விளைவிக்கப்பட்ட சோளங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
நானோ டெக்னாலாஜி - புதிய தொழில் நுட்பம். மிகச் சிறிய அளவில் (ஒரு முடியின் குறுக்களவை விட சிறியது) இயந்திரங்களையும் பாகங்களையும் உருவாக்குவதில் ஆராய்ச்சிகள் நடைபெருகின்றன. இவை கேன்சர் நோயை அழிப்பதிலிருந்து புதிய போர் கருவிகளை உருவாக்கும் வரையிலான பல ஆராய்ச்சிகள் அடங்கும்.

இந்த தொழில்நுட்பத்தில் உருவானவற்றைக் கட்டுப்படுத்துவதுதான், இன்றளவில் பெரிய பிரச்சினை.

நூறு வருடங்களுக்கு பிறகு ஒரு புதிய செயற்கை உயிரினம் உருவாகலாம். நாம் உருவாக்கலாம். அது  இந்த உலகத்தின் புதிய பரிணாம மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

இறையாகும் முயற்சியில், நாமே இரையாக ஆகாமல் இருந்தால் சரி.

பின் குறிப்பு:

பிரே புத்தகம் படிப்பதற்கு இன்டரஸ்டாக இருக்கும். புதிய தொழில்நுட்ப தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

Friday, June 24, 2011

ஹெய்டி


ஹெய்டி - இந்த புத்தகம் சிறுவர்களுக்கான நாவல். எழுத்தாளர் ஜோஹானா ஸ்பைரி 1880 ல் எழுதியது. இந்தப் புத்தகம் மிகவும் பிரபலமடைந்ததால், பல மொழில்களில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஹெய்டி கதாபாத்திரம் இன்றும் பல கார்ட்டூன்களில் உலா வருகிறாள்.



நான் படித்த தமிழ் புத்தகம், எழுத்தாளர் ஸ்ரீமதி / கயல்விழி அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இந்தக் கதை சுவிட்சர்லாந்து மலைப் பிரதேசங்களில் நடக்கிறது. இந்த கதை படிக்கும் போதும், படித்த பின்பும் மனதிற்குள் பொங்கி வரும் சந்தோஷத்தை, அன்பாகத்தான் செலவழிக்க முடியும்.

முக்கிய கதாபாதிரங்கள்

ஹெய்டி - சிறுமி. எல்லாவற்றுக்கும் ஆச்சரியப்படுவாள். எல்லோர் மீதும் அன்பு செலுத்துவாள்.

பீட்டர் - ஹெய்டியின் நண்பன். ஆடு மேய்க்கும் சிறுவன். ஹெய்டி யார் மீதாவது அன்பு செலுத்தினால், அவர்கள் மீது கோபம் கொள்பவன்.

ஹெய்டியின் தாத்தா - தனிமையை விரும்புபவர். தன் கிராமத்து மனிதர்களை வெறுப்பவர். ஆனால் இயற்கையை நேசிப்பவர். ஹெய்டியால் எல்லோரையும் நேசிப்பவராய் மனம் மாறுகிறார்.

பீட்டரின் பாட்டி - கண் தெரியாதவள். அன்புக்கு ஏங்குகிறவள். பீட்டர் எப்படியாவது படிக்கவேண்டும் என்று ஆசைப் படுபவள். ஹெய்டியால்  நிறைவேறுகிறது.

கிளாரா - கால்கள் வலுவில்லாதால், நடக்க முடியாத சிறுமி. ஹெய்டியின் நட்பால், சந்தோஷம் அடைகிறாள்.

ஹெய்டி நகரத்துக்கு செல்லும் போது, நாமும் அவளைப் போல இயற்கையான மலைப் பிரதேசத்தை மிஸ்(miss) பண்ணுவோம்.

இந்த புத்தகத்தால் கூட அன்பின் மதிப்பை உணரமுடியும். முடிந்தால் படியுங்கள்!

சந்தோஷப்படுவதற்கு எளிய வழி, அன்பு செலுத்துவதுதான்.

Sunday, June 12, 2011

ஏலியன்! அவதார்!


ஏலியன் , அவதார் படம் பார்த்திருக்கீங்களா?
இந்த பதிவு இந்த படங்களை விமர்சனம் செய்வதற்காக இல்லை. ஆனாலும் அந்த படங்களோட கதையை முதல்ல சொல்லிடறேன். 



ஏலியன்
நான்கு பாகங்கள் படமாய் வந்திருக்கு. நம்ம மனிதர்கள் ஒரு வேற்று கிரகத்தில இறங்குவாங்க. அங்க நிறைய ஏலியன் முட்டைகள் இருக்கும். அதிலிருந்து பயங்கிரமான ஏலியன் வந்து மனிதர்களை துரத்தி துரத்தி கொல்லும். இதில கவனிக்க வேண்டிய விஷயங்கள்
1. அவை மனிதர்களோட முகத்தில ஒட்டிக்கும். ஒட்டுண்ணி மாதிரி வாழ்ந்து, கடைசியா வயிற்றைக் கிழிச்சுக்கிட்டு வெளியே வரும்.
2. ஏலியனோட இரத்தம் அமிலத்தன்மை (ஏசிட்) வாய்ந்தது. இரும்பைக் கூட உருக்கக் கூடியது.
3. இந்த மாதிரி, ஏலியன்கள் ஒவ்வொரு கிரகமா அழிச்சிட்டு வரும்.

அவதார்
இதில மனிதர்கள் ஒரு உலோகத்தைத் தேடி, வேற்று கிரகத்துக்கு போவாங்க. அங்கிருக்கும் உயிரினங்களை அழிச்சிட்டு நமக்குத் தேவையானதை எடுத்துட்டு வர முயற்சிப்பாங்க.

இந்தப் படத்தில் ஆச்சிரயமான விஷயங்கள்..
1. அந்த கிரகவாசிகள் இயற்கையை நேசிப்பவர்களாகவும் அவைகளோடு தொடர்புள்ளவர்களாகவும் இருப்பாங்க.
2. நம்ம ஹீரோ, அவர்களோடு சேர்ந்து, நம்ம கெட்ட மனிதர்களைத் துரத்திடுவாங்க. அதற்கு இயற்கையாக மிருகங்கள் கூட உதவி செய்யும்.
3. இந்தப் படத்தை பொறுத்த வரைக்கும், மனிதர்கள் ஏலியன்கள் மாதிரி செயல்படுவாங்க.

ஏலியன்! அவதார்!

நமக்கு முன்னாடி எத்தனையோ உயிரினங்கள் வாழ்ந்திருக்கின்றன; அழிந்திருக்கின்றன. யாருக்கு வலிமை இருக்கோ, அவங்களால மட்டும்தான் இங்கு வாழ முடிஞ்சதது.

இயற்கையாகவே எப்பவும் சமநிலை இருந்திருக்கு. உணவுக்காகவோ அல்லது இருப்பிடத்துக்காகவோ ஒரு சில உயிரினங்கள் மற்றவைகளை வேட்டையாடி அழிச்சிருக்கின்றன. இருந்தாலும் இயற்கையாகவே ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. இத்தனைக்கும் அவைகளுக்கு நம்மைப் போல அறிவோ அல்லது கான்சியஸ் எனப்படும் உணர்வுகளோ இல்லை.

அப்ப எப்படி சமநிலை ஏற்பட்டிருக்கும்! தேவையில்லாம எதையும் அவைகள் அழிக்கவில்லை. இயற்கையை நம்பி வாழ்ந்திருக்கின்றன.

மனிதர்கள் நாம மட்டும், சுய அறிவோடும் சிந்தனையோடும் தோன்றியிருக்கிறோம். நம் அறிவு மேல் வச்சிருந்த நம்பிக்கையை இயற்கை மேல வைக்கலை.

கொடுமை என்னன்னா.., நமக்குத் தேவைப் படாத உயிரினங்களை அடியோடு அழிச்சிட்டோம். அதை விடக் கொடுமை, நமக்குத் தேவையான தண்ணீரையும் சுற்றுச்சூழலையும் கெடுத்துக் கொண்டிருக்கிறோம். மரங்களை அழிச்சிட்டு வருகிறோம்.

நாம்தான் இந்த பூமியோட வியாதி ( Matrix படத்தில வில்லன் சொல்றது). ஒரு நாள் இந்த பூமியில வாழ முடியாத சூழ்நிலை ஏற்படலாம். அப்ப என்ன பன்றது?

வாழத் தகுந்த மாதிரி வேறு கிரகத்துக்கு போலாம். அங்க போய்.. ஏலியன் படத்தில வர்ற மாதிரி அங்க எல்லாத்தையும் அழிப்போம்.

இதை எத்தனையோ தடவை படிச்சாச்சு! அப்ப எதற்கு வெட்டியா இந்த பதுவு?

நம்முடைய சிந்தனைகள் தெளிவானவை. நம்மால மற்ற உயிர்களைப் புரிந்து கொள்ள முடியும்.

நல்ல செயல்கள் நல்ல சிந்தனையிலிருந்துதான் வரும். முதல்ல சிந்திக்க ஆரம்பிப்போம். ஏதாவது நல்ல செயல்கள் வராமலா போயிடும்!

வாழ்வோம்! வாழ விடுவோம்! நமக்குள்ள ஒரு அவதார் இருக்கார்.


பின்குறிப்பு:
இதற்கு என்ன தீர்வுன்னு யோசிச்சுப் பார்த்தேன். ஒன்னும் புரியலை; தெரியலை. ஏதோ Matrix படம் பார்த்த பிறகு, ஒரு ஆர்வத்தில இந்தப் பதிவை எழுதிட்டேன்!