Thursday, April 30, 2015

மனவேதனை


அர்ஜூனனுக்கு நம்பவே முடியவில்லை. என்ன நடந்தது ? திருடர்களிடம் தோற்றுவிட்டேனா!

அவன் கர்வமும் காண்டீபமும் செயலற்றுப் போயிருந்தன. இனி மக்களுக்கு எப்படித் தெரியும், அர்ஜூனன் ஒரு மாவீரன்!

வனவாசம் அறிவார்களா? இழந்த நாட்கள்தான் திரும்ப வருமா..

குருசேரத்ரப் போர் சொல்லிப் புரியவைக்க முடியுமா? எவ்வளவு வேதனை.

வெற்றியின் சந்தோஷத்தைப் பார்த்திருப்பார்கள்.. என்னோடு சேர்ந்த குதுகலித்தவர்களுக்கு கூட தெரியாது என் இழப்பின் வேதனை.

என் தோல்வியை இப்படியா நான் சந்திக்கவேண்டும். மிகப்பெரிய வெற்றிக்குப் பின் ஏற்படும் சிறு தோல்வி, ஒரு தோல்வியா?

காண்டீபத்தை இழந்துவிட்டால், என் கர்வம்? நான் யார்?

***