கொடைக்கானல் டிரக்கிங் போனதைப்
பத்தி எழுதனும்னு ஆசை. 'உயிர் பிழைச்சோம்' -ங்கிற
இரண்டு வார்த்தையை எப்படி விவரிக்கிறது. கோர்வையாய் எழுதி புரிய
வைக்கமுடியுமா?
சில விஷயங்களை அனுபவிக்கனும். அனுபவிச்சாக்கூட
புரிஞ்சுக்கமுடியுமான்னு தெரியலை.
அதனால சில கேள்விகள், அதன் பதில்கள்.
******
என்னதான் கத்துக்கிட்டீங்க?
ஒன்னுமே இல்லை.
வீட்டுக்கு வந்தவுடன் இப்படித்தான்
யோசிச்சேன்.
"எல்லோர் மீது அன்பா இருக்கனும். உதவியா இருக்கனும்".
எத்தனை தடவை இந்த மாதிரி
யோசிச்சிருப்பேன்.
ஆனால், நம்ம மீது செலுத்தற அன்பை கூட உதாசினப்படுத்தினது
தானே உன்மை. தேவையே இல்லாத கோபம், வெறுப்பு!
எல்லாமே நமக்குதான்கிற பேராசை. இதெல்லாம் மாத்திக்கிட்டு,
சுயநலமில்லாம அன்பா இருக்கமுடியுமா?
கடைசி வரைக்கும் ஒன்னுமே கத்துக்கமாட்டோம். கத்துக்கிறதுக்கு, சாவைப் பக்கத்தில பார்க்கனும்னு அவசியமே
இல்லை!
*****
பயம் ?
இனிமேல வழி இல்லை, திரும்பவும்
மலை மேல் ஏறனும்னு சொல்லும் போது, சாயுங்காலம் மணி 5 இருக்கும். அப்பதான் முதல் பயம் முளைச்சது.
இருட்டறதுக்குள்ள ஏறனும்னு
சொன்னதும்,
ஏறிடலாம்னு ஒரு எண்ணம் இருந்திச்சு. எல்லோரும்
'முடியுமான்னு' கேட்கலை (யோசிச்சிருப்போம்), ஆனால் வேகமா ஏறிக்கிட்டே இருந்தோம்.
சாதரணமாவே முள்ளுக் குத்திடும்னு
பயம் இருக்கும்.
முள்ளுச்செடின்னு தெரிஞ்சும் அதைக் கையில் பிடிச்சு ஏறவேண்டியதாயிருந்தது.
கோரைப்பு புல்லைப் பிடிச்சுக்கிட்டு
செங்குத்தாக மலை ஏறும்போது, துபே சார் தடுமாறும் போதெல்லாம், எனக்கும் பயம்தான்.
கொஞ்ச நேரம் நான்தான் கடைசியா
வந்தேன்.
"கீழே விழுந்தால், கண்டுபிடிக்ககூட முடியாதே"!
அப்புறம் கிருஷ்ணாதான் கடைசியா வந்தான். எனக்குப்
பின்னாடி 'கிருஷ்ணா' இருக்கான்கிறதுதான்,
என்னோட முழு தைரியம்.
ஆனால் அவனுக்குப் பின்னாடி யாருமே இல்லைங்கிறது, என்னோட மிகப்பெரிய பயம். அவன் அசால்ட்டா ஏறினதால்,
அவ்வளவா கவலைப்படலை.
கடைசியா ஒரு மரத்துக்கு
கீழ் ஓய்வெடுத்தோம்.
இனி ஏற முடியாதுன்னு சிலர் சொன்னாலும், எனக்கு
ஏறிடனும்னு ஆசை. அங்க இரவு பூரா தங்கினால், குளிர் தாங்க முடியுமா! மழையை நினைச்சாலே, பயம்தான். நல்லவேளை மழை வரலை.
எனக்குத் தெரிஞ்சு எலோருக்கும்
பயம் இருந்தது.
எப்பாடியாவது ஏறிடனும்கிற எண்ணத்தில்தான், முக்கால்வாசி
தூரம் அன்று இரவே ஏற முடிந்தது.
பயப்படறது கோழைத்தனம் இல்லை. அதையும்
மீறி ஏறினதுதான் வீரமா(Courage), நான் நினைக்கிறேன்
******
நம்பிக்கை?
காலையில் மூன்று இட்லி ஒரு
வடை சாப்பிட்டது.
மழைக்காலம். குளிரும் மலை, இருட்டு. மரத்துக்கடியில் நாங்க. 'விடிஞ்சா உயிரிடுப்போம்கிறது' தெரியலை. அப்பதான் நம்பிக்கை 'ஒளிக் கற்றையாக' வந்தது.
ரமேஷ் சாரோட, காரின்
ஹெட்லைட் வெளிச்சம், மேலே இருந்து 'முதல்
நம்பிக்கையாய்' வந்தது. அவங்க எப்படியாவது
தேடி வந்தால் பரவாயில்லைன்னு இருந்தது.
அப்பப்ப செல்போனில் பேசின
ரமேஷ் சார்,
ரங்கா சார் குரல்தான் சின்ன நம்பிக்கையாய் காதில் ஒலிச்சது.
எங்களைத் தேடி வந்தவங்களோட ( சுரூர்,
கிராமத்துக்காரர் ஒருவர்) விசில் சத்தமும்,
தூரத்தில் தெரிஞ்ச டார்ச்லைட் ஒளி வட்டம்தான், அந்த ஒட்டுமொத்த இரவுக்கான வெளிச்சமாய் இருந்தது.
அவங்க எங்களைக் கண்டுபிடிச்சிடுவாங்க; அவங்க கொண்டு
வர போர்வையைப் போர்த்துக்கிடலாம்னு, எண்ணத்தில்தான் நான் தூங்கவே
செஞ்சேன்.
விடியற்காலையில், இருட்டு
சுத்தமாய் வெளுத்துப் போயி, வானம் கொஞ்சமாய் சிவந்தது;
நாங்க இருந்த இடத்திற்கு எதிரில் பார்க்கமுடிந்தது. 'பிழைச்சோம்' கிற முழு நம்பிக்கை.
அந்த விடியல், ஒரு அற்புதமான
விடியல்.
*****
சின்னச் சின்ன சுவராஸ்யங்கள்
?
என்னை அட்டைப் பூச்சி கடிச்ச
உடனே,
கிருஷ்ணா ஃபோட்டோ எடுக்க ஆரம்பிச்சிட்டான் வழக்கம்போல. கூட ராமன் சாரும் சேர்ந்திட்டாரு.
கிருஷ்ணாவையும் மாமுவையும் (துபே சார்)
கூட்டிக்கிட்டு வரதுக்குள்ளாற, ஐயைய்யோ..,
ஃபோட்டாவா பிடிச்சுத் தள்ளிட்டாங்க.
மாமூ ஏற முடியாம ஏறும்போது
கூட,
நாகராஜனைத் திட்டிக்கிட்டே வரார்.
ராமன் சார்தான் நம்பர் 1. கிடு
கிடுன்னு ஏறிப்போய்கிட்டே இருந்தாரு!
உண்ணி வழக்கம் போல 'பொறுப்பு'.
அந்த இரவு "இன்னும் ஒரு மாசாத்தில் கல்யாணம்னு"
பொறுப்புணர்ச்சியின் சிகரம்.
திலக் எப்பவுமே சீரியஸா
ஜாலியா இருப்பான்.
"ஒரு
பெண்ணாலா இதெல்லாம் முடியுமா?" அப்படீன்னு கேள்வி கேட்கறது
மடத்தனம்னு, புரியவைக்கிறது - மாலதி.
ஜோயல் சொன்ன டிரக்கிங் கதைகள்தான், தங்கியிருந்த
இரவில் சுவராஸ்யமானது. ஏங்க முன்னாடியே சொல்லலைன்னு கேட்டால்,
"நான் சொன்னால், எங்க கேட்கறீங்க"
ன்னு சொல்றார்.
ரெஸ்க்யூ(Rescue) டீம் கொண்டு வர்ற, பிரியானில லெக் பீஸ் தனக்குத்தான்னு
கிருஷ்ணா சொன்னதுதான், அந்த நேரத்து சிரிப்பு.
மாமூ நைட்டு பூரா குடை பிடிச்சுக்கிட்டே
உட்கார்ந்திருக்கிறாரு.
அந்தக் குளிரிலும் கண்ணு
சொக்குச்சு பாருங்க!
அதுதான் தூக்கம்.
*****
ஜாலியான டிரிப்பா? அல்லது
அட்வென்ச்சரா?
ஆறு மணி நேர டிரக்கிங்னு
நினைச்சுக் கிளம்பும் போது நல்லாத்தான் இருந்தது. மலையில்
இருந்து கீழ் இறங்கிறவரைக்கும் ஜாலிதான். அப்புறம், எதிர்பாராத அட்வென்ச்சர்தான் (பிழைச்சிட்டோம்ல).
*****
முதல் கேள்விக்கு எனக்குப்
பிடித்த பதில்.
கொடைக்கானல் விட்டு கிளம்பும்
போது,
கடைசியா எல்லாக் குழைந்தைகளும் என் முதுகுல நல்லா அடிச்சாங்க.
அப்ப ஃபீல் (feel) பண்ணியது.
Life is so Beautiful (வாழ்க்கை
மிகவும் அழகானது).