Monday, December 31, 2012

2012



இந்த வருட லட்சியங்கள் எதையும் ஒழுங்கா செய்து முடிக்க முடியலை. அதனால் என்ன? 2013ல் முடிச்சிடலாம்!

இந்த வருடம் நடந்த மிகவும் சந்தோஷமான விஷயம்:-
- நண்பர்கள் சுப்பிரமனியன் & ஜெயக்கிருஷ்ணன் திருமணங்கள்
- நண்பன் பிரபு - பெண் குழந்தைக்கு அப்பாவானது

ஆச்சர்யமான விஷயம்:-
-புத்தக கண்காட்சியில் எழுத்தாளர் ராமகிருஷ்ணன் அவ்ர்களை சந்தித்து, புகைப்படம் பிடித்துக் கொண்டது!
-என் பிறந்த நாள் அன்று, என்னோட பதிவை பூமி(Bhumi) வெப்சைட் பிளாக்ல போட்டிருந்தாங்க!

நம்ப முடியாத விஷயம்:-
பூமியில(Bhumi) எனக்கு சேஞ்ச் மேக்கர்(Change Maker Award) அவார்டு கொடுத்தது.

வயலின் - கீதம் வந்தாச்சு. இன்னும் சாகித்யம் சரியா வரலை! அதுக்குள்ள ஒரு இடைவெளி.

*****

டில்லி

இந்த வருடத்தை திரும்பி பார்த்தால், வெறும் வேலை மட்டும்தான் பார்த்திருக்கிறேன். அடிக்கடி டில்லி போயிட்டு வருவதால், சில சமயம் வீட்டுல் தூங்கி எழுந்திருக்கும் போது "இப்ப எங்க இருக்கிறேன்?" என்ற கேள்விதான் வந்தது!

அந்த அளவுக்கு ஊர் சுற்றி இருக்கிறேன்.

ஜெய்ப்பூர்

 சுதிப்த(Sudipta), அனுபம்(Anupam) கூட இரண்டு நாள் ஜெய்ப்பூர் சுற்றிப் பார்த்தோம். முக்கியமா பிங்க் பேலஸ்ல யானை சவாரி!
நாநிடால்(Nainital)

ஏரிகளின் நகரம் - செஸாங்(Shashank) அவர்களும் வந்திருந்தார். ஏரிகளை சுற்றிப் பார்த்ததை விட, துப்பாக்கியில் பலூனை/பாட்டிலை சுட்டதுதான் அதிகம்.

சிக்கிம்(Sikkim)

வித்தியாசமான அனுபவம். கிருஷ்ணா, தயாளன் & மிதுலாஜ் - காங்டாக்(Ganktok), யும்தாங் வேல்லி(Yumthang Valley) & பெல்லிங்(Pelling) ஒரு வாரம் சுற்றிப் பார்த்தோம். எல்லா இடத்திலும் பனி, மலை, மோசமான ரோடு.. கரணம் தப்பினால் மரணம் அப்படீங்கிறதுக்கான அர்த்தம் தெளிவா புரிஞ்சது

நடிகர் தலைவாசல் விஜயை யும்தாங் வேல்லி போற வழியில் சந்தித்தோம். கடைசியா அவர் எங்க ஹோட்டலுக்குத்தான் வந்தார். டின்னர் சாப்பிடும் போது எல்லோருக்கும் பரிமாறினார்!

திரும்பி வரும் போது.. ஏர்போர்ட் கார் ரிப்பேர் ஆகி, வேற கார் வந்து, பயங்கர வேகமா போன டென்ஷன் இருக்கே.. கிருஷ்ணா பத்து வரியில் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுற அளவுக்கு இருந்தது!

குற்றாலம்

சுப்பிரமணி அவர்கள் திருமணத்துக்குப் போனப்ப, குற்றாலம் போய் பார்க்க முடிஞ்சது. ஐந்தருவியில் தண்ணி கொஞ்சம் வந்தாலும் குளிக்க முடிஞ்சது. கடைசி நாள், தயாளனும் நானும் குற்றாலீஸ்வரை கும்பிட்டு, நான் மட்டும் மெயின் அருவியில் குளித்தேன் (பின்ன துண்டு, துணி எதுவுமே கொண்டு போகலை!)

கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி , திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு ராமு அண்னா கூட போனேன். கடைசி நாள், தயாளன் கூட மறுபடியும் போக முடிஞ்சது. முக்கியமா - காந்திமதி அம்மன் மூக்குத்தி ஜொலிப்பை காத்திருந்து தரிசித்தோம்.

திருச்சி

ஜெயக்கிருஷ்ணன் திருமணம் திருச்சியில் நடந்தது. அப்பா, அம்மா & தம்பி எல்லாரும் திருச்சியை இரண்டு நாள் சுற்றிப் பார்த்தோம். கல்லனை, முக்கூடல், சமயபுரம்; திருவரங்கம் - பிரம்மாண்டமான கோயில்! நிறைய கோயில்கள் போனதில, திருவானைக்கால் கோயிலை மட்டும் அவசரமா பார்க்க வேண்டியதாயிற்று.

ஊட்டி

ஏப்ரலில் அம்மா & அப்பா கூட இரண்டு நாள் ஊட்டி, குன்னூர் சுற்றிப் பார்த்தோம்.

டிசம்பரில் மூன்று நாள், நானும் தம்பியும் பைக் எடுத்திக்கிட்டு ஊட்டியை சுற்றிப் பார்த்தோம். முக்கியமா அவலாஞ்சிக்கு போகிற வழி சூப்பரா இருந்தது. அவலாஞ்சி, அப்பர் பவானி டேம், எமரால்டு டேம் - புது இடங்களைப் பார்க்க முடிஞ்சது. ஊட்டியில் நைட் ஷோ சினிமா (நீதானே என் பொன்வசந்தம்).

*****

நன்றியுரை

வயலின் கற்றுக்கொடுத்த திரு. மதன் மோகன் அவர்களுக்கு மிக்க நன்றி.

என்னை விட பிரமாதமாய் செயல்பட்டவர்கள் நிறைய பேர் இருந்தும், என்னைப் பாராட்டி அவார்டு கொடுத்த பூமி(Bhumi) நண்பர்களுக்கு - நான் நன்றி சொல்வதை விட செயலில் காட்டனும்.

என்னோடு விவாதித்து, என்னை தெளிவு படுத்தும் பிரபு ஸார், ரங்கநாதன் ஸார் & C.P. ராகவேந்திரன் ஸார்..

அன்பு செலுத்தும் நல்ல நண்பர்கள் சுப்பிரமணியன், பிந்து, பிரபு, ஜெயகிருஷ்ணன், முருகானந்தன் & அனைத்து நண்பர்களுக்கும்..

'அன்புத் தம்பி' கமலக்கண்ணன்.. என் அப்பா, அம்மா..

உலகம் அழியாமல் காப்பாற்றின கடவுளுக்கு!

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

No comments: