Wednesday, October 24, 2012

பிரபஞ்சம்



எழுத்தாளர் சுஜாதா Coming Of Age in Milky Way புத்தகத்தில் படித்ததாக, பிரபஞ்ச வரலாற்றை சுருக்கமாக 'கடவுள்' என்ற கட்டுரைப் புத்தகத்தில் விவரித்துள்ளார்.

முதன் முதல் ஆதியோடு ஆதியில் காலம், வெளி, சக்தி இம்மூன்றும் தோனிறிய கணத்திலிருந்து துவங்குகிறது பிரபஞ்சத்தின் சரித்திரம்.

பிரபஞ்சம் ஆரம்பித்து 3 நிமிஷம் 42 செகண்டுக்குப் பின் ஹீலியம், ஹைட்ரஜன்  தோன்றியது.

அதன் பின் பத்து லடசம் வருடங்களுக்கு அப்புறம்தான் காலக்ஸி, நட்சத்திரங்கள் தோன்றின. இன்றிலிருந்து 1700 கோடி வருஷம் முன்பு.

450 கோடி வருஷம் முன்னால் சூரியன், மற்ற கிரகங்கள் பிறந்தன. பூமியும் பிறந்தது.

380 கோடி வருஷம் முன்பு, நம் பூமி கொஞ்சம் சூடு குறைந்து இறுகியது.

350 கோடி வருஷம் முன், முதல் நுட்பமான உயிரினம் தோன்றியது.

150 கோடி வருஷம் முன்பு, முதல் தாவரம்.

90 கோடி வருஷம் முன் முதல் ஆண் பெண் பிரிவு.

40 கோடி வருஷம் முன் முதல் பூச்சி.

20 கோடி வருஷம் முதல் மிருகங்கள்.

ஐந்தரைக் கோடி - குதிரை.

மூன்றரைக் கோடி - நாய், பூனை

2 கோடி - குரங்குகள. சுற்றுச் சூழல் இன்றைய நிலை போல.

1.8 கோடி முதல் மனிதன் - ஹோமோ எரக்டஸ்.

6 லட்சம் வருஷம் முன் ஹோமோ ஸேபியன்ஸ் - ஆதி மனிதன்.

36000 வருஷம் முன்பு - நெருப்பை பயன்படுத்த ஆரம்பித்தது.

40000 வருஷம் முன் முதல் மனித மொழிகள்.

35000 வருஷம் - முதல் இசைக் கருவி.

20000 - முதல் விவசாயம்.

5600 - முதல் எழுத்துக்கள்.

இதன் பின் நடந்தது. நவீன் இயற்பியல், வானியல், வேதியியல் என்று இன்று வரை வந்து விட்டோம்.

4 நாட்கள் முன்பு - சுஜாதாவின் 'கடவுள்' புத்தகம் படிக்க ஆரம்பித்தது.

அரை மணி நேரமாய் - இந்தப் பதிவு எழுதுவது!!

*****
ஒவ்வொரு மதம் மற்றும் கடவுள் பற்றியும் சுருக்கமாக இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார். அறிவியல் பார்வையில் 'கடவுள்' எவ்வாறு தேடப்படுகிறார் என்பதையும் விவரித்துள்ளார்.

படிக்க நல்ல சுவராஸ்யமான புத்தகம்.

*****

அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே

திருவாய்மொழி

அவரவர் தங்கள் அறிவின் படி கடவுளைத் தேடுகிறார்கள்; காண்கிறார்கள். அவரவர் விதிகளின் படி அடைய முடியும்.

அறிவியல் விஞ்ஞானிகளையும் கடவுள் தேடுபவர்களின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்!

No comments: