Friday, July 22, 2011

ஹாய் தினேஷ்


மதன் அவர்களை நான் ரொம்ப ரொம்ப மதிக்கிறேன். அவரோட ரசிகன் நான். அவரை மாதிரி என்னால ஆக முடியாதுன்னு தெரியும். ஆனாலும் அதற்காக முயற்சி செய்யாம இருக்க முடியுமா, சொல்லுங்க?






*மாலதி
உங்களோட வாழ்க்கையின் நோக்கம் என்னவென்று நினைக்கிறீங்க?
எனக்கு பிடிச்ச மாதிரி வாழ்றதுதான்!


*தயாளன்
நீங்க நல்லவரா? கெட்டவரா?
நல்லவன் யாரு? நல்லது செய்யறவன்.
யாரு நல்லது செய்வாங்க? நல்ல எண்ணம் இருக்கிறவங்க.
யாருக்கு நல்ல எண்ணம் இருக்கும்? நல்லவங்களோட பழகிறவங்களுக்கு.

எங்கூட பழகிறவங்களும் நல்லவங்களா இருக்காங்க. என் நண்பர்களும் நல்லவங்களா இருக்காங்க.  இப்படி என்னை சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் நல்லவங்களா இருக்காங்க. அதனால நான் ரொம்ப நல்லவனா இருக்கிறேன்.

உங்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்குங்களா?

எந்த விஷயத்தை எதிர்கொள்ளும் போதும் ஏற்படக்கூடிய பயம்தான், வெட்கம்.
தப்பு செய்யறவங்களுக்குதான் வெட்கம் வேணும். எனக்கு எதுக்கு?

மானம், சூடு, சொரணைங்கிறது எல்லாம், வெறும் உணர்ச்சி கொந்தளிப்பு. இல்லைங்கிற ஒரு விஷயத்தை இருக்குற மாதிரி காட்டற பாசாங்கு எனக்கு தேவையில்லை.

அந்த பெண்ணை புரோபோஸ்(Propose) பண்ணீட்டிங்களா?

அந்த பெண்ணை, நான் நிஜமாலும் விரும்பி, ஒரு நாள் அவ இல்லைனா நான் இசையில்லாத வெறும் பாடல் மாதிரி உணர்ந்தா, அன்னிக்கு அவங்களை புரோபோஸ் பண்ணுவேன். சரி எந்த பெண்ணை?


*கமலக்கண்ணன் 
கம்யூனிசம் சோஸியலிசம் பற்றி புரியற மாதிரி சொல்லுங்க?

ஒரு பணக்காரன், ஒரு நிலம் வைச்சிருந்தான். அந்த ஊர்ல தண்ணீர் தேவைப்பட்டதால, அவன் நிலத்தில கூலி ஆளுங்களை வைச்சு கிணறு தோண்டினான். அதுக்கு கூலியா குடிக்கிறதுக்கு தண்ணீ கொடுத்தான். அவன்தான் கிணத்துக்கு முதலாளி. எல்லாருக்கும் வேணுங்கற தண்ணீரை காசுக்கு வித்து மேலும் பணக்காரன் ஆனான். வேலை செஞ்ச கூலி ஆளுங்க, தண்ணீரை காசு கொடுத்து வாங்கி கடன்காரங்களா ஆனாங்க! இதுதான் கேபிடலிசம்.

கிணறு தனக்கு சொந்தமாயிருந்தாலும், தண்ணீர் எல்லோருக்கும் பொதுவானது. அவன் ஒரு அரசாங்கம் மாதிரி தண்ணீரை தேவைப்படுற எல்லோருக்கும் தேவையான அளவு கொடுத்தான். இது சோஸியலிசம்.

கிணறும் எல்லோருக்கும் பொது. தண்ணீரும் எல்லோருக்கும் பொது. இது கம்யூனிசம்.

*ரங்கநாதன்
Belief க்கும் faith க்கும் உள்ள வித்தியாசம்?
இரண்டுமே நம்பிக்கையை குறிக்கும் வார்த்தைகள்தான்.

Belief- தெரிந்த உண்மைகளை அடிப்படையாக கொண்டது.
Faith - உணர்வுகளை அடிப்படையாக கொண்டது.
கேள்விகளுக்கு பதில் எழுதுவேன்னு நான் நினைச்சது Belief. அதையே நீங்க நினைச்சது Faith.




பின் குறிப்பு:

மதன், நீங்க கிரேட். கேள்விகளுக்கு எனக்கு பிடிச்ச மாதிரி பதில் எழுதறதே கஷ்டமா இருக்கே. எப்படி எல்லோருக்கு பிடிச்ச மாதிரி நீங்க எழுதறீங்க.

1 comment:

rangs said...

Yes take my first question..
What is the difference between belief and faith?????