Thursday, May 13, 2010

இயல்பு

இயல்பு - இந்த வார்த்தைக்குத்தான் நான் அதிகம் அர்த்தம் தேடியிருக்கிறேன்.
என்னுள் அடிக்கடி கேட்டுக்கொள்வதும் - நான் இயல்பாக இருக்கிறேனா?
I AM WHAT I AM என்ற பனியன் வாசகத்தின் உண்மையை புரிந்து கொள்ள இந்த முயற்சி.
நான் - இப்படிப்பட்டவன் என்று நன்றாக எனக்குத் தெரிகிறது. இம்மியளவும் என்னால் மாற முடிவதில்லை.
வேறுமாறி இருக்கும் போது, நான் இயல்பாக இருக்கமுடிவதில்லை. எனக்கு நானாகவே தெரிவதில்லை. வளைந்த இரப்பர் இயல்புக்கு வருவது போல், என் இயல்புக்கு வந்துவிடுகிறேன்.
மற்றவர்களின் இயல்பையும் , சில சமயம் அவர்களின் இயல்பற்ற நிலையையும் காண முடிகிறது.
இயல்பற்று இருக்கும் போதும் சிலரால் இயல்பாக இருக்கமுடிகிறது.
இயல்பு என்பது இங்கு இயல்பற்றதோ? இயல்பற்றதுதான் இங்கு இயல்போ?
இன்னும் குழப்பமாகத்தான் இருக்கிறது !

No comments: